தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு முடிவு..!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பரிசோதனை முறை என்பது 10 பேரின் ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என வந்தால் அவர்களின் முடிவு ஒரே நேரத்தில் கிடைக்கும். தொற்று இருக்கும்பட்சத்தில் மீண்டும் அவர்களை தனித்தனியே பரிசோதனை செய்ய முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜபாளையம் எம்.எல்.ஏ -விற்கு கொரோனா தொற்று..!
இந்த முயற்சியால் அதிகளவு பரிசோதனை மேற்கொள்ள முடியும் எனவும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு குழு பரிசோதனை செய்வதன் மூலம் அவர்களுக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பதை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.