மாநிலம் முழுவதும் உள்ள அரசின் பல்வேறு துறைகளில், குரூப்-4 பதவிகளுக்கான 9168 காலி பணியிடங்களை தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
மாநிலம் முழுவதும் ஏற்படும் காலி பணியிடங்களை, மாநில அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில், உள்ள அரசின் வருவாய்த்துறை, நிதித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய பல துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, அரசு வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன்படி, குரூப் 4 பதவிகளுக்கான இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 6,850 காலிப்பணியிடங்களும், நகராட்சி நிர்வாகத் துறையில் 1,862 வார்டு அலுவலருக்கான காலி பணியிடங்களும் சேர்த்து மொத்தமாக 9,168 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா பீச்சில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி.., நாளை முதல் அமல்!!
சமீபத்தில் குரூப்-1 மற்றும் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது குரூப்-4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியாகி இருப்பது, வேலையில்லா இளைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.