ஏ பி டிவில்லியர்ஸை தொடர்ந்து ஐபிஎல்லை விட்டு விலகிய கிறிஸ் கெயில் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

ஐபிஎல் போட்டியில் இதுவரை அதிக சிக்சர்களை அடித்தவர் என்ற பெருமையை பெற்ற, கிறிஸ் கெயில் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்து கொள்ள உள்ளார் என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஓய்வில் கிறிஸ் கெய்ல் :

ஐபிஎல் போட்டியில் அதிக சிக்சர்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் கிறிஸ் கெய்ல். ஐபிஎல் 2021 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக, களமிறங்கிய கெயில் 10 ஆட்டங்களில் விளையாடி 193 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ள வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனவே ஏ பி டிவில்லியர்ஸ் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்ததை அடுத்து, கெயிலும் இந்த போட்டியில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

42 வயதான இவர், இதுவரை 103 டெஸ்டுகள், 301 ஒரு நாள் ஆட்டம், 79 டி20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் 7ம் இடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பையுடன் இவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கடைசி ஆட்டத்தை தன்னுடைய சொந்த ஊரான ஜமைக்காவில்  விளையாடி கிறிஸ் கெயில் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here