இந்தியாவில் ஏற்கனவே கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய் உள்ளது. இந்நிலையில் புதிதாக பச்சை பூஞ்சை நோய் உருவாகியுள்ளது.
நாட்டில் சில தினங்களுக்கு முன்பு கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இந்த பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த பூஞ்சை பாதிப்பை தொடர்ந்து வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை நோய் உருவானது.பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுள்ள நபர்களையே இந்த பூஞ்சை நோய் அதிகம் தாக்கியது.
இந்த பூஞ்சை நோய் பெரும்பாலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று மீண்ட நபர்களையே அதிகம் தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த பூஞ்சை பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இதிலிருந்து குணமடையலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனவிலிருந்து மீண்டு பெருமூச்சு விடும் மக்களுக்கு இந்த பூஞ்சை நோய் புதிய ஆபத்தாக உருவெடுத்தது.
தற்போது மத்திய பிரதேசத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய நபருக்கு புதிதாக பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்