மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மகத்தான திட்டங்களை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் செயற்கையாக கை, கால்களை தயாரித்து மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்த “புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மையம்” சென்னை கே.கே.நகரில் தயாராகி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வருகிற ஜனவரி 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மையத்தை திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கட்டட செலவு, உபகரணம் என 39.83 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வரும் விளம்பரங்களுக்கு இனி குட்பை., எலான் மஸ்க் எடுத்த திட்டவட்ட முடிவு!!
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் வருமான வரம்பு இல்லாமல் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கான திட்டப்பணிகளும் ஜனவரி 28ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.