இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டம் – 50,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார்!!!

0

கல்வி அமைச்சகமானது பிரதமரின் இளம் எழுத்தாளர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதலுக்கான திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 30 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளுக்கு மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டம்:

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் மத்தியஅரசு சார்பில் ‘அம்ரித் மஹோத்சவ்’என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இந்தியாவில் படித்தல், எழுதுதல் மற்றும் புத்தக கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் 30 வயதுக்கும் கீழான இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கும் ஒரு வழிகாட்டுத் திட்டமாகும்.

இந்த திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் mygov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம். ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஜூலை 31-ம் தேதி வரை இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  இதில் வெற்றியாளர்களுக்கு மாதம் 50000 என 6 மாதத்திற்கு உதவித்தொகை வழங்கப்படும்.

வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 75 இளம் எழுத்தாளர்கள் இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டமானது இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி எழுதுவதற்கு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரதமரின் நோக்கத்தின் ஓர் அங்கமாக செயல்படும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here