வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே பெரும்பாலானோர் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வருகிற நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை இருப்பதால், சுகாதாரத்துறை முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி அரசு மருத்துவமனை செவிலியர்கள் மாதத்திற்கு 4 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்க கூடாது. அதேபோல் 10 நாட்களுக்கு மேல் விடுப்பு வேண்டுமெனில், மருத்துவ வாரிய அதிகாரிகளின் உத்தரவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலம்: உயர்நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட அதிரடி தகவல்!!