அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு கோடிக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்த உள்ளதாகவும், அதிகாரப்பூரவ அறிவிப்பை இம்மாத (செப்டம்பர்) இறுதிக்குள் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதன்மூலம் அடிப்படை ஊதியம் ரூ.15,000 பெறுபவர்களுக்கு, ரூ.6750 வரை அகவிலைப்படி உயரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னையில் இந்த உள்நாட்டு விமானங்கள் ரத்து? வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!