
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தபட்டுள்ளதாக அண்மையில் அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் உத்திரபிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் தீபாவளி போனஸாக 30 நாட்கள் ஊதியம் என அதிகபட்சம் ரூ.7,000 வரை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தில் 14 லட்சம் ஊழியர்கள் பயனடைய இருப்பதால், பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்களே தீபாவளிக்காக இந்த நாளும் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட AP!!