
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களை தொடர்ந்து பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த உத்தரவு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் கேரள அரசு பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கையில் சீட் பெல்ட் பொருத்தும் பணிகளை அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெற இருப்பதாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 11ம் தேதி விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!