நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. மேலும் சாலை விபத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்க வாகன ஓட்டிகளின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு மிகவும் மோசமடைந்தது. இதனால் அங்கு வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மெது மெதுவாக குறைந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தற்போது ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது.அதன்படி டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி வரும் நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து கனரக வாகனம் டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமான பணி, சுரங்க பணி, டீசல் ஜெனரேட்டர்களுக்கான தடை தொடரும் என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் 2,257 இளநிலை உதவியாளர் பணியிடம்., உடனே விண்ணப்பியுங்கள்!!!