அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை மத்திய, மாநில அரசு சார்பில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் பெற்று வருகின்றனர். ஆனால் இந்த ஊதியக்குழுவின் மூலம் குறைவாக சலுகைகள் கிடைப்பதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
இதனால் கூடிய விரைவில் 8 வது ஊதிய குழு அமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் 8 வது ஊதிய குழு அமைப்பது குறித்து எந்த பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை என அரசு மறுத்துள்ளது.
சுற்றுலா பயணிகளே தயாராகுங்க.., கோடை விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு ரயில்!!
மேலும் 8 வது ஊதிய குழு அமைக்கப்பட்டால் தற்போது உள்ள குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என கூறப்பட்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் 8 வது ஊதியக் குழுவை அமைக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.