அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதியம், 38% ஆக உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அரசு விளக்கம்:
அரசு ஊழியர்களுக்கு, 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் சூழ்நிலைகள் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூலை-டிசம்பர் காலத்துக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில், 34% தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 38% அரசு உயர்த்த உள்ளதாக வதந்தி கிளம்பியது. இது குறித்து விளக்கம் அளித்த, மத்திய அரசின் பத்திரிகை அலுவலகம் (PIB) இதற்கான எந்த அதிகாரப்பூர்வ உத்தரவையும் நிதி அமைச்சகம் பிறப்பிக்கவில்லை.
ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் சூப்பர் வசதி – இனி கவலையே இல்லை! நிர்வாகம் அதிரடி!!
விரைவில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தது. அரசின் இந்த திடீர் முடிவால், ஊழியர்கள் குழம்பிப் போய் உள்ளனர். வருகிற தீபாவளிக்குள் இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.