தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த மே 17ம் தேதி அகவிலைப்படியை 38%-த்திலிருந்து 42%-மாக முதல்வர் ஸ்டாலின் உயர்த்தினார். இந்த அகவிலைப்படி உயர்வானது ஏப்ரல் 1ம் தேதி கணக்கிடப்படும் எனவும் அறிவித்தார். ஆனால், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மே மாதத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனை தொடர்ந்து, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை வரும் செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்தில் தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசோ ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை கடந்த மார்ச் மாதமே 4% ஆக உயர்த்தி 42% என அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது, மத்திய அரசானது மே 31ம் தேதிக்குள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வுக்கான அப்டேட்டை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஆண்டு அரிசி, கோதுமை உற்பத்தி அதிகரிப்பு.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!!
அதாவது, தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு (CPI-IW) மற்றும் AICPI குறியீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டே மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. இதில், AICPI குறியீட்டு எண்களை வரும் மே 31ம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, மத்திய அரசு அகவிலைப் படியை உயர்த்தினால் மேலும் 4% அதிகரித்து 46%-மாக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.