பொங்கல் பண்டிகை காலங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க அரசு தரப்பில் இருந்து 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் வசிக்கும் 5 லட்சம் மக்கள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி உள்ளனர்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜன.18 கூடுதல் விடுமுறை?? அன்பில் மகேஷ் விளக்கம்!
மேலும் தற்போது பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் சொந்த தொழில் செய்பவர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் பலர் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து திரும்புகின்றனர். அந்த வகையில் மக்கள் பயணிப்பதற்குகாக அரசு சார்பில் இருந்து 1187 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இன்று முதல் 18 தேதி வரை இயக்க உள்ளனர்.
அதுபோக பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வரும் புதன் கிழமை தொடங்க உள்ள நிலையில் நாளையில் இருந்து வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்புவார்கள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 1941 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.