மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு:
மாநிலம் முழுவதும், கடந்த சில நாட்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, மகாராஷ்டிரா அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இக்கூட்டத்தில் பேசிய, மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில் பணியாற்றும் ‘சேவிக்கா’ களுக்கு 20%ம் , உதவியாளர்களுக்கு 10%ம் ஊதியம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
தமிழகத்தில் மட்டும் தான் வடமாநிலத்தவர்க்கு உரிய பாதுகாப்பு., அமைச்சர் பரபரப்பு பேட்டி!!
இதுபோக,அங்கன்வாடிகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய மொபைல் போன்கள் வாங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த ஊழியர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ட்ராக் ஆப் என்ற செயலி மூலம் கண்காணிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்தார்.