தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கிய இயக்குனராக இருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கெளதம் வாசுதேவ் மேனன்
மின்னலே என்ற காதல் படத்தை திரையுலகிற்கு கொடுத்து பிரபல இயக்குனராக அனைவரின் நெஞ்சத்தில் பதிந்தவர் தான் கெளதம். இவர் எடுக்கும் படங்களில் எந்த ஒரு எக்ஸ்ட்ரா கன்டென்ட்டும் இல்லாமல் ஒரு எதார்த்த காதலை மட்டுமே கொடுத்திருப்பார்.
அதிலும் காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் இப்பொழுது வரை பலரின் பேவோரைட் திரைப்படமாக உள்ளது. வாரணம் ஆயிரம் திரைப்படம் இவரின் சொந்த கதையை வைத்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் இவரது பெர்சனல் வாழ்க்கையை வைத்து பார்த்தால் இவருக்கு ப்ரீத்தி மேனனுடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மகன்கள்(ஆர்யா, துருவ், ஆதியா) உள்ளனர். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.