அந்த மனசு தான் சார் கடவுள்.. கூகுள் ஊழியர்கள் குடும்பத்திற்கு அந்நிறுவனம் செய்த பேருதவி!!

0
google
google

கூகுள் ஊழியர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்துக்கு அடுத்த 10 வருடங்களுக்கு அவரின் சம்பளத்தை பாதியை நிறுவனம் வழங்கும் என்று அசத்தல் அறிவிப்பை கூகுள் நிறுவனம் தற்போது விடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக கூகுள் திகழ்கிறது. அதுவும் சமீபத்திய காலங்களில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. சமீபத்தில் கூட டிரைவர் இல்லாத கார், பலூன் இண்டர்நெட், கூகுள் கிளாஸ் உள்ளிட்ட பல விதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கூகிளின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதில் பணியாற்றும் ஊழியர்கள்.

அவர்களுகாகவே கூகுள் நிறுவனம் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது கூகுள் ஊழியர் உயிர் இழந்தால் அடுத்த 10 வருடங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் பாதியை கூகுள் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. நமக்கு நெருக்கமானவர்களின் உயிர் இழப்பு பொதுவாகவே நமக்கு ஒரு மோசமான தாக்கத்தை உண்டு செய்யும்.

 

அதுவும் அந்த இறப்பு நம் வீட்டில் யாருக்கேனும் இருந்தால் அதன் தாக்கத்தில் இருந்து நாம் வெளியே வர பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். மேலும் அவர்களையே சார்ந்திருக்கும் நம் குடும்ப பொருளாதாரமும் பாதிக்கப்படும். இதை உணர்ந்த கூகுள் நிறுவனம் தற்போது இந்த அறிவிப்பை தனது பணியாளர்களுக்காக வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here