தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் திங்களன்று, இந்தியா உட்பட உலகளவில் தனது ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணிபுரியும் (WFH) வசதியை அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நீட்டித்து உள்ளது.
திரு.சுந்தர் பிச்சையின் மின்னஞ்சல்
“ஊழியர்களுக்கு முன்னரே திட்டமிடும் திறனை வழங்க, அலுவலகத்தில் இருந்து செய்ய தேவையில்லாத எங்கள் உலகளாவிய தன்னார்வப் பணிகளை வீட்டில் இருந்து செய்வதை ஜூன் 30, 2021 வரை விரிவுபடுத்துகிறோம்” என்று கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார் .
1000 அமெரிக்க டாலர்கள் ! இரண்டு லட்சம் ஊழியர்கள் !
கூகிளில் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் முழுநேர தொழிலாளர்கள் உட்பட சுமார் இரண்டு லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
இப்படியும் செய்வாங்களா என்ன!! என்ன கொடுமை சார் இது!! ஆட்டை அரெஸ்ட் செய்த போலீஸ்!!
கோவிட்-19 தொற்றுநோயின் போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கான உபகரண செலவுகளை ஈடுசெய்ய கூகிளிலிருந்து 1000 அமெரிக்க டாலர் கொடுக்கப்படும் என மே மாதத்தில் அறிவித்தது.
நிரந்தரம் செய்ய ஆய்வு
பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தன. ஆனால் படிப்படியாக மக்களை பணியிடத்திற்கு அழைத்து வருகின்றன, அதே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுகின்றன.
இருப்பினும், பல நிறுவனங்கள் WFH ஐ நிரந்தர அம்சமாக மாற்றுவதற்காக ஆராய்ந்து வருகின்றனர்.