சென்னை கடந்த 7 நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். தற்போது தங்க இறக்குமதியும் பெருமளவு சரிந்த காரணத்தால் விலை குறைந்து கொண்டே சென்றது. இன்று திடீரென விலை மீண்டும் உயர தொடங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வங்கக்கடலில் இன்று மாலை உருவாகும் ‘புரெவி புயல்’
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14 அதிகரித்து ரூ.4,532க்கும், ஒரு சவரன் ரூ.104 உயர்ந்து 36,256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.30 உயர்ந்து ரூ. 64.60க்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.