சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 3 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நகைக்கடைகள் ஆரம்ப ஊரடங்கில் அடைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் ஆபரண வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் சர்வதேச விலை நிலவரம் மற்றும் முதலீடுகள் அதிகரித்த காரணத்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. நேற்று வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்திற்கு சென்றது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சீனாவிற்கு அடுத்து இந்தியாவை சீண்டும் நேபாளம் – இந்திய டிவி சேனல்களுக்கு தடை!!
தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால் அதன் தேவையும் சிறிது அதிகரித்து உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 26 ரூபாய் குறைந்து ரூ. 4,692 க்கும், ஒரு சவரன் 208 ரூபாய் குறைந்து 37,356 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை பெரிதளவு மாற்றம் செய்யப்படாமல் ஒரு கிராம் 55.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ. 55,100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.