சென்னையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இன்று மட்டும் சவரனுக்கு 208 ரூபாய் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய விலை:
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் நகைக்கடைகள் திறக்கப்படாமல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வருட அட்சய திருதியை அன்று கூட கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் ஒருபுறம் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதற்கு அந்நிய செலாவணி மற்றும் கொரோனா பாதிப்பால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டிற்காக தங்கத்தின் மீது கவனத்தை செலுத்தியதே காரணம் ஆகும். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை – சென்னையில் பயங்கரம்..!
இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை அதிகரித்து உள்ளது. விலை ஏற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து ரூ. 4679க்கும், ஒரு சவரன் 208 ரூபாய் உயர்ந்து ரூ. 37,432க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் ரூ. 55.50 க்கும், ஒரு கிலோ 55,500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.