கடந்த சில தினங்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்க விலை இன்றைய மாலை நிலவரத்தில் திடீரென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்க விலை:
இந்த ஆண்டு முழுவதும் தங்க விலை அதிகபட்சமாக உயர்ந்து தான் வந்தது. பொது முடக்க காலத்தில் கூட தங்க விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இதனால் நகை வாங்க வேண்டும் என்றும் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நினைத்தவர்கள் மிகுந்த கவலை அடைந்தனர்.
2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் – பிசிசிஐ ஒப்புதல்!!
இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்து தங்க விலை சற்று குறைந்து தான் வந்தது. இன்று காலையும் கூட அதிரடியாக குறைந்தது. ஆனால், தற்போது மாலை நிலவரத்தில் சற்று உயர்ந்துள்ளது.
மாலை நிலவரம்:
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் (22 Carat) 40 ரூபாய் அதிகரித்து 37,760 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் அதிகரித்து 4,720 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தூய தங்கம் ஒரு கிராம் 5,104 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் 40 ரூபாய் அதிகரித்து 40,824 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது.