மீண்டும் ஏறுமுகத்தில் செல்லும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன தெரியுமா??

0

மாநகரில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து,  ரூ.34,952 -க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம்:

கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.  தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் சுப முகூர்த்த நிகழ்வுகளால் இந்த விலை ஏற்றம் இருக்கலாம் என வணிகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு,  ஆபரணத் தங்கத்தின் விலை 208 ரூபாய் சரிந்து, 34,856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 28 ரூபாய்  குறைந்து ரூ.4,357 க்கு விற்பனையாகி வந்தது.

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து 34,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இது மட்டுமில்லாமல், ஒரு கிராம் தங்கம் 4,369 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.  இது போக, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 64.70 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here