நகை கடன் தள்ளுபடி பெற மேலும் ஒரு அரிய வாய்ப்பு – இத மட்டும் பண்ணா போதும்.. கூட்டுறவு துறை அமைச்சர் அறிவிப்பு!!

0

கூட்டுறவு வங்கிகளில், வழங்கப்பட்ட 5 சவரன் நகை கடன் தள்ளுபடியில் இடம் பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு ஒரு அரிய வாய்ப்பு பற்றி கூட்டுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடன் தள்ளுபடி :

தமிழக அரசு அண்மையில், 5 சவரனுக்கு மேல் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் இந்த நகை கடனை பெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, நகைக் கடன் பெற்றவர்கள் குறித்த 51 வகையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

இதனை அடுத்து 10,18,066 நபர்கள் மட்டுமே நகைக் கடன் பெற தகுதியானவர்கள் என்ற இறுதி பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதனால், 35 லட்சம் பேர் இந்த நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நகை கடன் பெறும் போது, சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்களில் ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு விவரங்கள் கொடுக்காதவர்கள் மற்றும் தவறாக கொடுத்தவர்கள் என அனைவருக்கும், மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் எனவும், இதைப் பயன்படுத்தி தகுதியானவர்கள் தள்ளுபடி பெறலாம் என தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here