புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை – சவரன் 39 ஆயிரத்தை தாண்டியது!!

0
Gold Jewels
Gold Jewels

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இன்று ஒரு சவரன் 39 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோர் நகை விலையைக் கேட்டு ஆடிப்போய் உள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

உலகப் பொருளாதாரத்தையே ஆட்டி வைத்திருக்கும் கொரோனா பரவல் இன்னும் ஒழிந்த பாடில்லை. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவால் தொழில்கள் நஷ்டமடைந்ததால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் வருமானம் இன்றி தவிக்கும் மக்கள் விலைவாசி உயர்வால் மேலும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

Gold Purchase
Gold Purchase

ஊரடங்கு காலத்தில் நகை வியாபாரம் முடங்கிப் போய் இருந்தாலும் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு உயர்ந்ததால் விலையும் சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோர் தங்கம், வெள்ளி என நகை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. வரலாறு காணாத அளவு சவரன் 39 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 32 ரூபாய் அதிகரித்து ரூ. 2,879க்கும், ஒரு சவரன் 256 ரூபாய் உயர்ந்து ரூ. 39,032 ஆக உள்ளது. வெள்ளியின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருவதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 66.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here