ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை – விழி பிதுங்கும் மக்கள்!!

0
Gold
Gold

தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை தினமும் அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி விலை ஏறிக்கொண்டே போனால் தங்கம் வாங்க சொத்தை தான் அடகு வைக்க வேண்டுமோ என மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இன்றைய விலை நிலவரம்:

உலக பொருளாதாரம் கொரோனா வைரஸ் பாதிப்பால் அடிமட்டத்திற்கு சென்று விட்டது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில் துறைகள் இயங்கத் தொடங்கி உள்ளதால் சிறிது சிறிதாக பொருளாதாரம் முன்னேறி வருகிறது. ஆனால் மறுபுறம் விலைவாசி உயர்வு மக்களை திண்டாட வைக்கிறது. கொரோனா ஊரடங்கால் பல மாதங்களாக கடைகள் அடைக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெறவில்லை. இருப்பினும் சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அதிகரித்த முதலீடுகள் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது.

வனிதாவை விமர்சித்து வந்த சூர்யா தேவி கைது – நள்ளிரவில் போலீசார் அதிரடி!!

Gold Jewels
Gold Jewels

தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து – முதல்வர் அறிவிப்பு!!

தற்போது ஊரடங்கு தளர்வுகளால் நகை வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. இதுவும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் இதுவரை இல்லாத அளவில் தங்கத்தின் விலை சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது. இன்றும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 42 ரூபாய் உயர்ந்து ரூ. 4815 க்கும், ஒரு சவரன் 336 ரூபாய் அதிகரித்து 38,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.2.70 அதிகரித்து ரூ.66.60-க்கு விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here