காட்மேன் வெப்சீரிஸ் முன்னோட்டம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு 2வது முறையாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
காட்மேன் வெப்சீரிஸ்:
ஜீ 5 தளத்தில் வெளியாக இருந்த காட்மேன் வெப்சீரிஸ் தற்போது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அந்த சீரிஸ் டீசரில் தான் முதல் சர்ச்சை தொடங்கியது. அதில் குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பது போன்று காட்சிகள் அமைந்து இருந்தது. இதனையடுத்து இதனை ரிலீஸ் செய்யக்கூடாது எனவும் அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக மற்றும் சில அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் வெப்சீரிசிற்கு தணிக்கை இல்லாத காரணத்தால் இவ்வாறான செயல்கள் நடப்பதாக கூறப்பட்டது.
எனவே இதுகுறித்து வழக்கு பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து நேரில் ஆஜராகாத இயக்குனர் யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு வரும் 6ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதிலும் ஆஜராக விட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |