ஒருவரின் வாழ்க்கையில் அவரின் கர்மா வினைகளை பொறுத்தே அவரின் வாழ்க்கையில் நல்லது கேட்டது போன்றவை நடக்கிறது. இதனை நவக்கிரகங்களே செயலாற்றுகின்றனர். இந்த கர்மா வினைகளை தீர்க்க நவகிரகங்களின் வழிபாடு மிகவும் முக்கியம்.
கர்மா வினை
ஒரு மனிதன் செய்யும் தவறுகள் மற்றும் தர்மங்களை மேலோகத்தில் சித்திர குப்தனால் எழுதிவைக்கப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பாவ புண்ணியங்கள் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல அடுத்து வரும் ஜென்மங்களிலும் நமமை சேரும். இதை தான் கர்மவினை என்று கூறுகிறோம். இது கேட்ட விஷயங்களை மட்டுமல்ல நல்ல விஷயங்களையும் சேர்த்து குறிப்பிடுவது. நீங்கள் படும் துன்பத்திற்கு உங்களது செயல்களே முழுக்காரணம். நாம் செய்யும் பாவங்களை நவக்கிரகங்களே நமக்கு இந்த வேலைகளை செய்கின்றனர். இந்த கர்மா வினைகளை தீர்க்க ஒரே வலி தான் உண்டு. அது தான் அன்னதானம்.
அன்னதானம் என்பது நாம் கோவில்களுக்கு வழங்குவது மட்டுமல்ல. இது நம் புண்ணிய கணக்கில் மட்டும் சேருமே தவிர இது நமது பாவங்களை குறைப்பதில்லை. எனவே அன்னதானம் என்பது ஆதரவின்றி வீடுகள் எதுவும் இல்லாமல் ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் ஒருவருக்கு உணவு வழங்குவது தான் உண்மையான அன்னதானம். மேலும் சனிக்கிழமைகளில் நவதானியத்தில் தோசை வார்த்து சுத்தமான நல்லெண்ணெய்யை ஊற்றி சாப்பிட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும்.
அரிசி – சந்திரன், துவரம் பருப்பு – செவ்வாய், பச்சைப்பயிறு – புதன், கொண்டைக்கடலை – குரு, கறுப்பு உளுந்து – ராகு, மொச்சை – சுக்ரன், கொள்ளு – கேது, கோதுமை – சூரியன் எள்ளு – சனி. போன்றவற்றை குறிக்கும். எனவே இதனை வைத்து தோசைகள் செய்து சனிக்கிழமைகளில் சாப்பிட்டு வந்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என கூறப்படுகிறது.