இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 4 போட்டிகளை தொடர்ந்து வென்று 8 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வெற்றிகளுக்கு ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெலின் முக்கிய பங்கு வகித்தார். இவர் வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்காக பயிற்சி மேற்கொண்ட போது, கோல்ஃப் வண்டியின் பின்பக்கத்திலிருந்து விழுந்து அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
ரசிகர்களுக்காக சூர்யகுமார் யாதவ் செய்த அந்த செயல்…, வைரலாகும் புகைப்படம் உள்ளே!!