தமிழர்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் தற்போது வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை உட்பட ரூ.1000 ரொக்க பணமும் ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதாக தமிழக அரசு முன்னதாக தகவல் வெளியிட்டது. பின்னர் இந்த திட்டத்தை ரத்து செய்து பொங்கல் பொருளுடன் பணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 2.19 கோடி மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி ஜனவரி 8 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலைக்கடைக்கு சென்று பயோமெட்ரிக் முறையில் உணவு பொருளுடன் ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எந்தவித சிக்கலும், மாற்றமும் இருக்காது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.