பாதி உடல் எரிந்த நிலையில் கல்லூரி மாணவி மீட்பு – உத்திரபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி!!

0
தீக்கிரையாகிய திருமண வரவேற்பு விழா.. ஐந்து பேர் உடல் கருகி பலி - சோகத்தில் மூழ்கிய மாநிலம்!

உத்திரபிரதேச மாநிலம் அருகே பாதி உடல் எரிந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி மீட்பு

உத்திரபிரதேச மாநிலம் நாகரியா கிராஸிங் நெடுஞ்சாலை அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையில் காவலர்களால் மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்திலிருந்து காவல் துறைக்கு செய்தி தெரிவிக்கப்பட்டபோது, காவல் துறையினர், அந்த இடத்துக்கு வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

விசாரணையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் உத்திரபிரதேசம் மாநிலம் சுவாமி சுகதேவானந்த் கல்லூரியில் இளங்கலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி என கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஷாஜகான்பூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆனந்த் கூறும் போது, ‘உயிருடன் மீட்கப்பட்டுள்ள மாணவி மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியிடமிருந்து வாங்கிய தொலைபேசி எண்ணின் மூலம் அவரது தந்தைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது’ என கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து மாணவியின் தந்தை கூறுகையில், ‘வழக்கம் போல மதியம் 3 மணியளவில் மகளை அழைத்து செல்லும்படி கல்லூரிக்கு வந்த போது மகள் அங்கில்லை என தெரியவந்தது. நீண்ட நேரம் காத்திருந்த பின்பும் அவள் வராததால் அவளை தேட ஆரம்பித்தோம்’ என கூறினார். பாதியளவு எரிந்த நிலையில் மாணவி சிகிச்சை பெற்று வருவதால், அவரால் எந்த தகவலையும் சரியாக கொடுக்க இயலவில்லை. அவரது கல்லூரி நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here