
கடந்த சில மாதங்களாக உயர்தர ஹோட்டல் என்ற பெயரில் தரமில்லாத உணவுகளை விற்பனை செய்து வருவதால் சிலர் புட் பாய்சன் ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன் தினம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சவர்மா வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மா. சுப்ரமணியன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்களிலும் ஆய்வு நடத்த வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உரிய நெறி முறைகள் பின்பற்றாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர்…, பதறிப்போன தமிழக மீனவர்கள்!!