நாட்டில் திடீரென அறிவிக்கப்பட்ட முதல் முழு பொது முடக்கம் – அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

ஆஸ்திரேலியா நாட்டின் அருகில் உள்ள 1.2 லட்சம் மக்கள் வசிக்கும் தீவில் பல நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த நாட்டில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் அறிவிக்கப்பட்ட முதல் ஊரடங்கு உத்தரவு என்பது குறிப்பிடதக்கது.

முழு பொது முடக்கம்:

ஆஸ்திரேலியா  நாட்டிலிருந்து சுமார் 4,800 கிலோமீட்டர் தொலைவில் கிரிபாடி என்ற மிக சிறிய தீவு உள்ளது. இந்த தீவில் சுமார் 1.2 லட்சம் நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இரண்டு நபர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, பிஜி நாட்டில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 54 நபர்களில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அந்த நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் உள்ள பொதுமக்கள் பயங்கர பீதியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here