இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஹமாஸ் அமைப்பினர் ஆக்கிரமித்துள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் காசா பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி பெரிய, மருத்துவமனையான அல்-ஷிபாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
அதிலும் அந்த மருத்துவமனை அடிப்பகுதியில் தான் ஹமாஸ் அமைப்பினர் சுரங்கம் தோண்டி இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி, மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மருத்துவ சேவை கிடைக்காமல் குழந்தைகள் உட்பட 179 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு: நேரடி விவாதத்துக்கு எடப்பாடி பழனிசாமியை மா.சுப்ரமணியன் அழைப்பு!!