இந்தியா எல்லா வீரர்களையும் சமமாக நடத்தவில்லை என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
விராட் கோலி VS பும்ரா
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையே வெளியிட்டு வருகிறார். அதன்படி அண்மையில் சச்சின் டெண்டுல்கர், தோனி போன்ற முன்னணி வீரர்களை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்தார். ஆனால் தற்போது விராட் கோலியை விமர்சனம் செய்து வருகிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது விராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் சதமடித்து தனது பழைய பார்மை கொண்டு வந்தார். இவரது இந்த சதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அப்போது சமூக வலைத்தளங்களில் விராட் கோலி மட்டும் தான் ட்ரெண்ட் ஆகி வந்தார். இதற்கு கவுதம் கம்பீர் ஒரு போட்டியில் சதம் அடித்ததை வைத்துக் கொண்டு அவரை ஒரு ஹீரோவாக இந்திய ரசிகர்கள் கொண்டாடுவது சரியல்ல.
கப்தில் சாதனையை முறியடிப்பாரா ரோஹித்.., இன்றைய ஆட்டத்தில் நடக்க போகும் சரித்திரம் என்ன??
அப்படி கொண்டாடினால் அதே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமாரை யாருமே பேசவில்லை. கமெண்ட்ரியில் கூட நான் மட்டுமே அவரின் சாதனை குறித்து பேசினேன் என்றும், இது போன்று இந்திய ரசிகர்கள் செய்வது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது எனவும் கம்பீர் கூறியுள்ளார்.