இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான தொடக்க வீரர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர்:
இந்திய அணி இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3 வது போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில், சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன் இவர்கள் இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளித்து விட்டு பிரித்வி ஷாவுக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், பிரித்வி ஷாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, தற்போது அணியில் உள்ள சுப்மன் கில் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், டி20 தொடர்களில் தடுமாற்றம் அடைந்து வருகிறார். இதனால், இன்றைய போட்டியில் இவருக்கு ஓய்வு அளித்து விட்டு பிரித்வி ஷாவை இஷான் கிஷனுடன் களமிறக்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்திய விளையாட்டு வீரர்களுக்கான பிப்ரவரி மாத full schedule இதோ!!
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில், விராட் கோலி, ரோஹித் சர்மாவை தவிர்த்து பார்த்தால், பிரித்வி ஷா – இஷான் கிஷன் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இதனால், பிரித்வி ஷாவின் திறமைக்கு ஏற்ப அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கம்பீர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.