“நீ இத மட்டும் செய்ப்பா போதும்”…, அர்ஷ்தீப் சிங்க்கு கம்பீர் அறிவுரை!!

0
"நீ இத மட்டும் செய்ப்பா போதும்"..., அர்ஷ்தீப் சிங்க்கு கம்பீர் அறிவுரை!!

இந்திய அணியின் இளம் பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்க்கு, கவுதம் கம்பீர் உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரோடு ஒப்பிட்டு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

அர்ஷ்தீப் சிங்:

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரின் 3வது போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, 2வது போட்டியில் கூட கடைசி நேரத்தில் தான் வெற்றியை உறுதி செய்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், நாளை நடைபெற இருக்கும் போட்டி விறுவிறுப்பாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பு வரை, பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் தான் நிரப்புவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், இவர் சமீப காலமாக அதிக நோ பால்களை வீசுவதுடன், ரன்களையும் வாரி கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு அறிவுரை வழங்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருக்கும் ரிஷப் பண்ட்?? பிசிசிஐ தரப்பில் தகவல்!!

அதாவது, இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிடம் எதிரணி பேட்ஸ்மேனை மிரள வைக்கும் அளவுக்கு வேகம் இல்லை. இவர், ஒரு பவுலராக முதலில் நோ பால்களை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அர்ஷ்தீப் வேகமாக பந்து வீச கூடிய உம்ரான் மாலிக்கும் அல்ல, முகமது சிராஜும் அல்ல. எனவே, இவர் தனது, பந்து வீச்சில் வித்தியாசத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here