மீண்டும் உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை – ஒரே மாதத்தில் 2வது முறை அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
நாட்டில் இனி சிலிண்டருக்கு மானிய விலை இல்லை?? பயனாளிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு!!
நாடு முழுவதும் அதிரடியாக சரிந்த சிலிண்டர் விலை - 100 ரூபாய்க்கு மேல் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி!!

ஒரே மாதத்தில் 2வது முறையாக வீடு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூபாய் உயர்த்தப்பட்டு,  1,018 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு:

மத்திய அரசு, சர்வதேச எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருள்களை பெற்று, மாநில அரசிடம் சில்லறையாக விற்பனை செய்கிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை உயர்வு அடிப்படையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,015.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக, வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் 3 ரூபாய் அதிகரித்து, 1,018.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, 8 ரூபாய் உயர்த்தப்பட்டு 2,507க்கு விற்பனையாகிறது. எரிபொருட்களின் இந்தக் கடுமையான விலை உயர்வு பொதுமக்களிடையே தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here