அசுர வேகத்தில் மீண்டும் அதிகரித்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை – அவதியில் பொதுமக்கள்!

0
அசுர வேகத்தில் மீண்டும் அதிகரித்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை - அவதியில் பொதுமக்கள்!

கடந்த மே மாதம் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று முதல் மறுபடியும் விட்டு உபயோக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.1068.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிலிண்டரின் விலை உயர்வு:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப அவ்வப்போது பெட்ரோல்,டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாக வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.கடந்த மே மாதம் 7ம் தேதியில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ 50 உயர்த்தப்பட்டு மொத்தமாக ரூ 1015 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு சில நாட்களிலேயே ரூ 3.50 உயர்த்தி சிலிண்டரின் விலை ரூ 1018.50 என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் மீண்டும் இன்று (06-07-2022) முதல் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் ரூ 1018.50 ஆக இருந்த வீட்டு உபயோக எரிவாயு  சிலிண்டர் விலை தற்போது ரூ 1068.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் நடுத்தர வீட்டு இல்லத்தரசிகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here