சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பைக்கு தனி கட்டணத்தை, சொத்து வரியுடன் சேர்த்து கட்ட வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது. அதன்படி ரூ.10 முதல் 20 ஆயிரம் வரை குப்பைக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்புகள் காரணமாக இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திட்டம் நிறுத்தி வைப்பு:
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடக்கழிவு திட்ட மேலாண்மை சட்ட திருத்தும் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி வீடுகளுக்கு ரூ.10, நிறுவனங்களுக்கு ரூ.100 முதல் பொதுநிகழ்ச்சிகளுக்கு ரூ.20 ஆயிரம் வரை குப்பைக்கு தனி கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் நுழையும் உருமாறிய கொரோனா வைரஸ்??
இந்நிலையில் குப்பைக்கு தனி கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.