தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை, பொது இடத்தில் சிலை வைத்து கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் அதிகரித்து வந்த “டெல்டா வகை” வைரசின் இரண்டாம் அலை பரவலால் மாநிலம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது. இதனை அடுத்து மாநில அரசு எடுத்த தொடர் தொற்று தடுப்பு நடவடிக்கைகளாலும், தடையில்லா தடுப்பூசி செலுத்துவதாலும் வைரஸ் பரவலின் நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் மாதம் வரவுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு அரசின் சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை போடப்பட்டு உள்ளதாகவும், பொது மக்கள் ஒரே நேரத்தில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் பொது இடத்தில் பண்டிகையை கொண்டாட அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள் தங்கள் வீடுகளில் சிலைகளை வாங்கி வந்து வைத்து, பண்டிகையை கொண்டாடி தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியாததால் இந்த ஆண்டாவது பொது மக்களோடு விழாவை கொண்டாட நினைத்த மக்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்