நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!!

0

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று ஆதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் என்று மாநில அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு:

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அங்கு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு நேற்று ஒரே நாளில் 34,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இதன் எதிரொலியாக மாநில அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

அதன்படி கர்நாடக மாநிலத்தில் தொற்றினை குறைப்பதற்கு அங்கு முழு ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நாளை(ஏப்ரல் 27) முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மாநில அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த தகவலினால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here