நாடு முழுவதும் முழு ஊரடங்கு??பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!!

0

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையான ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்க மக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது மருத்துவ நிபுணர்கள் மீண்டும் முழு ஊரடங்கை விதிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இந்நிலையில் தற்போது இதுகுறித்து நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்தின் முடிவில் முழு ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டில் மீண்டும் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் இதனை மேற்கொள்ள அரசு தயங்குவதாகவும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here