உலகம் முழுதும் அச்சுறுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் 323 மின்சார ரயில்கள் இயக்கம்.
தளர்வு:
நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பேரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது நோய்த்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று முதல் சென்னையில் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 7ம் தேதி முதல் இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கை 208 லிருந்து 279 ஆக சென்னை ரயில்வே கோட்டம் அதிகரித்தது. மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என 323 மின்சார ரயில் சேவை இயக்கப்படும்.
ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போல மேலும்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்