சென்னை மாநகராட்சியின் சார்பின் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் பொதுமக்கள் 30 நிமிடங்கள் இலவச வைபை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல நலத்திட்டங்கள் மக்களுக்காக தொடங்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான அம்சமாக 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் சென்னையில் நிறுவப்பட்டுள்ளது.
அந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களின் மூலம் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் 30 நிமிடங்கள் இலவச வைபை சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த இலவச Wifi யை சென்னை மக்கள் பெற வேண்டும் என்றால் அவர்களது மொபைல் போனின் எண்ணை OTP மூலம் பதிவு செய்து இந்த இணைய வசதியை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் Wifi இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் விவரங்களை சென்னை மாநகராட்சியின் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்