6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்த, முக்கிய உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு பிறப்பித்துள்ளது.
அதிரடி நோட்டீஸ்:
பள்ளி மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு அவர்களது பள்ளிகளிலேயே இலவச சானிட்டரி நாப்கின் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. பள்ளி மாணவிகளுக்கு இந்த சானிட்டரி நாப்கின் கிடைக்காததால், இந்தியா முழுவதும் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், படிப்பை பாதியில் விட்டுச் சென்றதாகவும், இதனால் இதுகுறித்து அரசுக்கு விரைந்து உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டது.
ஜோதிகாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கும் அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது.