தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம், இலவச ரேஷன் பொருட்களை பெறும் பயனர்களுக்கு என்னென்ன, சொந்த பொருட்கள் இருக்க கூடாது என்பதை அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
இலவச ரேஷன் :
மத்திய அரசின் கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலம், தகுதி உள்ள பயனர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், 2023 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்காக அரசு பல லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நீங்கள் இலவச ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் பயனடைபவராக இருந்தால், உங்களுக்கு இந்த தகுதி கட்டாயம் இருக்க வேண்டும். ஒருவேளை இதிலிருந்து விலகி நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு பிரச்சனை தான்.
இந்த ரேஷன் கார்டு மூலம் பொருட்களை பெறும் நபர்களுக்கு சொந்தமாக வீடு, மனை, நான்கு சக்கர வாகன மற்றும் ஆயுத உரிமை போன்றவையில் இருக்கக்கூடாது. நீங்கள் கிராமவாசியாக இருந்தால் 2 லட்ச ரூபாயாகவும், நகரவாசியாக இருந்தால் ரூபாய் 3 லட்சம் ரூபாயாகவும் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். இந்த, பொருட்களெல்லாம் சொந்தமாக கொண்டவராக இருந்தால் தயவு செய்து இலவச ரேஷன் திட்டத்தில் இருந்து விலகி விடுங்கள். இல்லையென்றால் பல்வேறு, சட்ட சிக்கலில் மாட்டி தவிக்க வாய்ப்பு உள்ளது.