திண்டுக்கலில் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ் மொழி பற்றை வளர்க்கவும் மூன்று நிமிடத்தில் 10 திருக்குறள்களை கூறுபவருக்கு 1லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
இலவச பெட்ரோல்:
திண்டுக்கல்லில் உள்ள பி.ஆர்.என்.பி கல்விக்குழுமத்தின் சார்பில் கல்வி மற்றும் தமிழ்ப்பற்றை வளர்ப்பதற்கான விழிப்புணர்வு போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இப்போட்டியில் மூன்று நிமிடங்களில் 10 திருக்குறள் சொல்பவர்களுக்கும், 10 பொது அறிவு கேள்விகளுக்கு பதில் சொல்பவர்களுக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
மேலும் சிறந்த கல்வி சார்ந்து எழுதப்படும் ஸ்லோகன் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 லிட்டர் பெட்ரோல் இலவசமாக அளிக்கப்பட்டது. திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள குள்ளனம்பட்டி பெட்ரோல் பங்கில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானவர்கள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர். காவல்துறையினர் உட்பட பலரும் இந்த போட்டியில் ஆர்வமாக பங்குகொண்டு பரிசு பெற்று சென்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
குறிப்பாக எட்டு வயது சிறுமி ஒருவர் ஒரு நிமிடத்தில் 10 திருக்குறள்களை கூறியாதால் அவருக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய பி.ஆர்.என்.பி கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி “கொரோனா லாக்டவுன் காலத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவே நாங்கள் இது போன்றதொரு ஏற்பாட்டினை செய்துள்ளோம்” என்று கூறினார்.