அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு வழங்க நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!!

0

பெரும்பான்மையான மக்கள் தங்கள் உடல்நல பிரச்சனைகளுக்கு அரசு மருத்துவமனையையே நாடுகின்றன. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேலையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் இலவச உணவு :

தமிழகத்தில் பல்வேறு தனியார் மருத்துவ நிறுவனங்கள் இருப்பினும் மக்கள் அரசு மருத்துவமனையையே நாடுகின்றனர். மேலும் நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பதில் அரசு மருத்துமனை பெரும்பங்காற்றி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை எப்போதும் நிரம்பி வழிகின்றன.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகளின் சிரமத்தை போக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேலையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர இலவச உணவு சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இலவச உணவு சேவை துவங்கப்பட்டு விட்டது விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துமனையில் இத்திட்டம் அமலாக்கப்படும் என அவர் கூறியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here